இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதம்; உளவுத்துறையின் வீழ்ச்சி

ஒரு நாட்டினுடைய அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத்துறை தனது நாட்டையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக தேசிய பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக கவனம் கொண்டிருக்க வேண்டியது மிக முக்கிய பொறுப்பாகும். அதிலும், குறிப்பாக மக்களை அழிக்கும் பயங்கரவாதச் சக்திகள் நாட்டுக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதிலும் மிகத் தீவிரமாகவிருக்க வேண்டும். ஆனால், எமது நாட்டில் அது முழுமையாக தோற்றுப் போயிருக்கின்றது. அத்தோல்வி, இன்று எங்கள் நாட்டு மக்களின் உயிரையும், சர்வதேச மக்களின் உயிரையும் பறித்து, இரத்தத்தின் சுவையைச் சுவைக்க வல்லூறுகள் போல்க்காத்திருந்த பயங்கரவாதிகளின் கொடூரமான இரத்த வெறியாட்டத்திற்கு வித்திட்டிருக்கின்றது. இலங்கையில் பேரினவாதிகளினால் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக அன்று தமிழர்கள் ஆயுதம் தூக்கினார்கள். இதன், காரணமாக நாட்டில் 30-ஆண்டு காலம் கொடியயுத்தம் நடைபெற்றது. அவ்யுத்தம், 18.05.2009 அன்று முள்ளிவாய்காலில் முடிவுக்குவந்தது. யுத்தத்தின் போது, பல்லாயிரக் கணக்கிலான தமிழ் மக்கள் அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர், சிங்கள, முஸ்லிம் இளைஞர்கள் உட்பட தமிழர்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர், யுத்தத்த…